கோவை பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா: குவிந்த பக்தர்கள்

கோவை பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3 அன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நொய்யல் ஆற்றங்கரையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3 அன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நொய்யல் ஆற்றங்கரையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

ஆடிப்பெருக்கு விழா ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிபட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபடுகின்றனர்.

இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது நம் முன்னோர்களின் ஐதீகம். ஆடிப்பெருக்கு நகை வாங்கவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் இல்லத்திலும் ஆற்றங்கரைகளிலும் கன்னி தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம்.

ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து வருகை புரிந்து வருவதால், காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகமாகலாம் என்பதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...