கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் பராஷர் அக்ரோடெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வாரணாசியின் பராஷர் அக்ரோடெக் பயோ பிரைவேட் லிமிடெட் இடையே "சேமித்த தானிய பூச்சிப்பொறி" வணிகமயமாக்கலுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்பொறி சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களில் பூச்சிகளைக் கண்டறிந்து பிடிக்கும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 2 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரகம், பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களை வணிகமயமாக்கி வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, "சேமித்த தானிய பூச்சிப்பொறி" என்ற புதிய தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்காக, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வாரணாசியைச் சேர்ந்த பராஷர் அக்ரோடெக் பயோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த பூச்சிப்பொறி, சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களில் பூச்சிகளைக் கண்டறிந்து அவற்றைப் பிடிக்கும் ஒரு நவீன சாதனமாகும். இதனை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் பேராசிரியர் முனைவர் எஸ். மோகன் உருவாக்கியுள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் முனைவர். தமிழ்வேந்தனும், பராஷர் அக்ரோடெக் பயோ பிரைவேட் லிமிடெட் சார்பில் இயக்குநர் பூர்ணேந்திரசேகர் பாண்டேவும் கையெழுத்திட்டனர்.

இந்த முக்கிய நிகழ்வில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் சோமசுந்தரம், வேளாண் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ரவிராஜ், உணவுப் பதப்படுத்துதல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற பூச்சியியல் பேராசிரியர் முனைவர் மோகன் ஆகியோர் உட்பட பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதில் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது. இது விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்பதோடு, தானிய சேமிப்பு முறைகளை மேம்படுத்தி உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...