முத்துராமலிங்க தேவர் குறித்த அவதூறு: யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

கோவையில், முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது விடுதலை கேள்விக்குறியாக உள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில், முத்துராமலிங்க தேவர் தொடர்பாக அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாயப்பட்டதால், ஜாமினில் வெளியே வர முடியாமல் இருந்தார்.

பின்னர் உச்சநீதிமன்றம் சென்று சில வழக்குகளுக்கு ஜாமின் பெற்ற சவுக்கு சங்கர், தமிழகத்திலும் ஒவ்வொரு வழக்கிலும் ஜாமின் பெற்று வந்தார். இந்நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15 அன்று யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கோவை மத்திய சிறையில் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரை ஆகஸ்ட் 2 அன்று கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார், அவரை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகள் அனைத்திலும் அவர் ஜாமின் பெற்றால் மட்டுமே வெளியே வர முடியும். அதுவரை அவர் சிறையில் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...