உடுமலையில் தீரன் சின்னமலை நினைவு தினம்: பொள்ளாச்சி எம்.பி. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மரியாதை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொள்ளாச்சி எம்.பி. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலையின் 219வது நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரவி மற்றும் மாவட்டச் செயலாளர் ரகுபதி ராகவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், உடுமலை நகரச் செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.



மேலும், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மெட்ராத்தி தங்கராஜ், அப்பர் குரூப் சேர்மன் இளங்கோ, சபாபதி, வசந்தம் புக்ஸ் பெரிய தம்பி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட, ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய வீர தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தியது, தீரன் சின்னமலையின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் விதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...