துபாய் - கோவை இடையே தினசரி விமானம் இயக்க ஃப்ளை துபாய் ஆர்வம்!

கோவைக்கு சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்த ஃப்ளை துபாய் நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் தினசரி விமானம் இயக்க தயார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவைக்கும் துபாய்க்கும் இடையே தினசரி விமான சேவை தொடங்க ஃப்ளை துபாய் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவைப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குறைந்த விலை விமான சேவை நிறுவனமான ஃப்ளை துபாய், இந்தியாவில் வாரத்திற்கு சுமார் 30 விமானங்களை இயக்கி வருகிறது. இந்தியாவில் 8 நகரங்களுக்கு விமான சேவை இயக்கினாலும், கோவைக்கு இதுவரை விமான இணைப்பு வழங்கப்படவில்லை.

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சொகுசு பயண கண்காட்சியில் பேசிய ஃப்ளை துபாய் நிறுவனத்தின் இந்திய துணைக்கண்டத்திற்கான வணிக செயல்பாடுகளின் துணைத் தலைவர் பிரான் சதியதாசன், "கோவைக்கு கூடுதல் விமானங்களை இயக்க நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். கோவை நகரம் எங்கள் சேவை பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவுக்கான கொள்ளளவை அதிகரிக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் இங்குள்ள முக்கிய பிரமுகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அனுமதி கிடைத்தால், கோவையை துபாயுடன் இணைக்கும் தினசரி சேவையை குறைந்தபட்சம் இயக்க தயாராக உள்ளோம்," என்றார்.

இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களில்தான் பெரிய வளர்ச்சி கதை உள்ளது என்றும், அந்த வகையில் கோவை முன்னணி நகரங்களில் ஒன்றாக உள்ளதாகவும், ஏற்கனவே உள்ளதை விட அதிக சர்வதேச விமானங்கள் இயக்கப்பட வேண்டிய நகரம் என்றும் பிரான் கருத்து தெரிவித்தார்.

கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வலவன் பேசுகையில், "கோவை விமான நிலையம் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள உள்ளது. சமீபத்தில் இரண்டு கூடுதல் வெளிநாட்டு இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் அழகிய கிரிக்கெட் மைதான கட்டமைப்பை உருவாக்கி வருகிறார். இது கோவைக்கு விளையாட்டு சுற்றுலாவை கொண்டு வரும்," என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...