கோவை மதுகரை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்ற இருவர் கைது

கோவை மதுகரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரை சோதனையிட்டதில், 150 கிராம் கஞ்சா மற்றும் 55 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, ஆகஸ்ட் 2 ஆம் தேதி மதுக்கரை ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தார்.

சோதனையின் போது, அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் 55 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கோவை சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த மோகன் மகன் சிஜு (வயது 25) மற்றும் சிட்கோ சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தேவராஜ் மகள் ஷர்மிளா (வயது 27) என அடையாளம் காணப்பட்டனர்.

விசாரணையில், சிஜு ஒரு லேத் ஒர்க் ஷாப்பில் டர்னராக வேலை செய்து வருவதும், ஷர்மிளா B.Com., C.A. படித்து முடித்து ஆடிட்டராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், எடை இயந்திரம், மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதைப் பொருட்கள் விற்பனை செய்த இந்த இருவரும் எவ்வாறு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர், யாரிடமிருந்து இவற்றை பெற்றனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...