காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் போலி காவலர்கள் பூசாரியிடம் பணம் பறிப்பு - மூவர் கைது

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் போலி காவலர்களாக நடித்து பூசாரியிடம் ரூ.10,000 பறித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் போலி காவலர்களாக நடித்து பூசாரியிடம் பணம் பறித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர், சின்ன கரும்பாலத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் (44) என்ற கோவில் பூசாரி, ஆகஸ்ட் 2 அன்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மூவர் தங்களை காவலர்கள் என்று கூறி, அவரது பையை சோதனை செய்ய கேட்டனர். சோதனையின் போது பையிலிருந்த ரூ.10,000-ஐ எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள காவல் நிலையத்தில் விளக்கம் அளிக்குமாறு கூறிவிட்டு ஆட்டோவில் தப்பினர்.

இது குறித்து நித்தியானந்தம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் புலியகுளம், மசால் லே-அவுட்டைச் சேர்ந்த கார்த்திக் (29), மதுரையைச் சேர்ந்த ஜோதிராஜ் (21), ஷேக் அப்துல்லா (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கார்த்திக் ஆட்டோ ஓட்டுநராகவும், ஜோதிராஜ் கோவையில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. கைதான மூவரிடமிருந்து பறிக்கப்பட்ட ரூ.10,000 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...