கோவை சூலூரில் நாளை முதல் 'தாரங் சக்தி' பயிற்சி: 51 நாடுகளுக்கு அழைப்பு

கோவை சூலூரில் ஆகஸ்ட் 6 முதல் 14 வரை 'தாரங் சக்தி' பயிற்சி நடைபெறுகிறது. 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பத்து நாடுகளின் விமானப்படை விமானங்கள் பங்கேற்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நாளை (ஆகஸ்ட் 6) முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை 'தாரங் சக்தி' பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க மொத்தம் 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளின் விமானப்படை விமானங்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளன. இந்த பயிற்சியின் 2ம் கட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவும் இந்த பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா பங்கேற்கவில்லை. இந்த பயிற்சி உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் திறமையை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

பயிற்சி நடக்கும் போது சூலூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய இரு இடங்களில் "மேட் இன் இந்தியா" கண்காட்சியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...