கோத்தகிரி சாலையில் காட்டு யானைகள் கூட்டம்: வாகன போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி செல்லும் சாலையில் காட்டு யானைகள் கூட்டம் நடமாடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னரே போக்குவரத்து சீரானது.


கோத்தகிரியில் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் நடமாடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் தலையிட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னரே போக்குவரத்து சீரானது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 அன்று இரவு, கோத்தகிரி செல்லும் சாலையில் வனத்துறை சோதனை சாவடி அருகே காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வந்தது.

இதனையடுத்து வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர். அதன் பின்னரே வாகனங்கள் சாலையில் சென்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வனப்பகுதிகளை ஒட்டிய சாலைகளில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், காட்டு யானைகளை பார்க்கும் போது வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...