பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் அதிமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவதாக மாட்டு வியாபாரிகள் புகார்

பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் அதிமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவதாக மாட்டு வியாபாரிகள் சங்கம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. வெளியூர் வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், உள்ளூர் வாகனங்களுக்கு ரூ.1,000 வரை கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி மாட்டுச் சந்தை வளாகத்தில் மாநில மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாட்டு வியாபாரிகள் மற்றும் மாடுகளை ஏற்றி வரும் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடந்த சில நாட்களாக சந்தைக்கு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிமுகவைச் சேர்ந்த சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது. இதனைத் தடுத்து மாட்டு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இந்த தீர்மானத்தின் அடிப்படையில், பொள்ளாச்சி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். வெளியூரிலிருந்து மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையும், உள்ளூர் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை அதிமுகவைச் சேர்ந்த சிலர் வாகனங்களை தடுத்து நிறுத்தி பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பணம் தராவிட்டால் மாடுகளை கோசாலைக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டுவதாகவும் மாட்டு வியாபாரிகள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...