பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்: கேரள வியாபாரிகள் வராததால் பாதிப்பு

பொள்ளாச்சியில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் 1,500 மாடுகள் விற்பனைக்கு வந்தன. கேரள வியாபாரிகள் வராததால் 800 மாடுகள் விற்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டன.


கோவை: பொள்ளாச்சியில் இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாட்டுச் சந்தை நடைபெற்றது. இந்த சந்தையில் 1,500 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த மாட்டுச் சந்தையில் கறவை மாடுகள் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஜெர்சி இன பசுக்கள் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

எனினும், மொத்தம் கொண்டு வரப்பட்ட 1,500 மாடுகளில் 800 மாடுகள் விற்பனையாகாமல் திரும்ப ஓட்டிச் செல்லப்பட்டன. இந்த மந்த நிலைக்கு கேரள வியாபாரிகள் வராததே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக கேரள மாநிலத்திலிருந்து வரும் வியாபாரிகள் அதிக எண்ணிக்கையிலான மாடுகளை வாங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை அவர்கள் வராததால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

இந்த மந்த நிலை தொடர்ந்தால் உள்ளூர் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாட்டுச் சந்தையில் கேரள வியாபாரிகள் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கையை வியாபாரிகள் வெளிப்படுத்தினர்.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...