உலக தாய்ப்பால் வார விழா: பொள்ளாச்சியில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிப்பு

பொள்ளாச்சியில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஆரோக்கியமாக இருந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சியில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஆரோக்கியமாக இருந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் தாய்ப்பால் ஊட்டுதலின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில், பொள்ளாச்சியில் தாய்ப்பால் ஊட்டுதல் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.



இதைத் தொடர்ந்து, தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஆரோக்கியம் பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மகப்பேறு மருத்துவர்கள், குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இணை உணவுகளோடு சேர்த்து தாய்ப்பால் கொடுத்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரித்து குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தற்போது வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவது குறைந்து வருவதால், தாய்ப்பால் இல்லாமல் பல்வேறு வகையான மாட்டுப்பால், பவுடர் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்தனர். இந்நிகழ்ச்சி தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...