திருப்பூரில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி: 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

திருப்பூரில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் செலிப்ரேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் ரோட்டரி கிளப் ஆஃப் செலிப்ரேஷன் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் பவன் குமார் மற்றும் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.



பேரணியில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய சாலைகளின் வழியாக சென்றனர். பேரணி மங்கலம் சாலையில் உள்ள ரோட்டரி கிளப் அலுவலகத்தில் நிறைவடைந்தது.



இந்த நிகழ்ச்சியில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் செலிப்ரேஷன் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...