ஆழியாறு அணை 6-வது முறையாக நிரம்பியது: 1347 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

பொள்ளாச்சி ஆழியாறு அணை 6-வது முறையாக நிரம்பியதை அடுத்து, வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் 11 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணை 6-வது முறையாக நிரம்பியதை அடுத்து, வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் 11 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால், சோலையாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நிரம்பியது.



கடந்த ஒரு வாரமாக மழையின் அளவு குறைந்த போதிலும், நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால், ஆழியாறு அணை 6-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியில் 119.50 அடியை எட்டியது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1225 கன அடியாக இருந்தது.

அணையின் பாதுகாப்பு நலன் கருதி, வினாடிக்கு 1347 கன அடி உபரி நீர் 11 மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...