பொள்ளாச்சி தொகுதியில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, தொகுதியில் சுரங்கப்பாதை, மேம்பாலம் மற்றும் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.


Coimbatore: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு 08.08.2024 அன்று நடைபெற்றது. இதில் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள பல்வேறு சாலைப் பிரச்சினைகளை எடுத்துரைத்து, அவற்றுக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

அவரது முக்கிய கோரிக்கைகள்:

1. உடுமலை - பழனி சாலையில் பஞ்சாபி தாபா சந்திப்பில் புதிய கீழ்பாலம் (சுரங்கப்பாதை) அமைக்க வேண்டும்.

2. வேடபட்டி நால்ரோடு சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

3. பொள்ளாச்சி - உடுமலை நெடுஞ்சாலையில், அமுதசுரபி உணவகம் முதல் மரப்பேட்டை சந்திப்பு வரை, மெயின்ரோடு மற்றும் சர்வீஸ் ரோடு இடையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மீடியன்களை அகற்ற வேண்டும்.

இந்த கோரிக்கைகள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து, நேரடியாக அமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி.

இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், பொள்ளாச்சி தொகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பயணிகளின் நேரம் மிச்சப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...