கோவை செம்மொழிப் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும்: அதியமான் வலியுறுத்தல்

கோவை செம்மொழிப் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் வலியுறுத்தியுள்ளார். அரசு உடனடியாக சிலை அமைப்பதற்கான முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவையில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பது குறித்த அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன் தலைமையில் காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் உட்பட பல்வேறு பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அதியமான், "கோவையில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. கோவையில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கான தீர்மானத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது. இப்போதுள்ள அரசும் அதற்கு எதிராக இல்லை. முறையாக அணுகியிருந்தால் சிலை நிறுவப்பட்டிருக்கும்," என்றார்.



மேலும் அவர், "வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமியின் முயற்சியால் ஈரோட்டில் உடனடியாக டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து பேசியபோது, மிக விரைவில் செம்மொழி பூங்காவிற்கான வேலைகள் தொடங்க உள்ளன. அந்தப் பூங்காவின் முன்னால் டாக்டர் அம்பேத்கரின் சிலையை நிறுவலாம் என்று சொல்லி இருந்தார்," என்று கூறினார்.



"எனவே செம்மொழிப் பூங்காவில் கட்டாயமாக டாக்டர் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட வேண்டும். அரசு உடனடியாக முடிவு செய்து சிலை அமைப்பதற்கான முடிவை அறிவிக்க வேண்டும். நாளை கோவை வரும் முதலமைச்சரை சந்திப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்," என்று அதியமான் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...