கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து பேச முதல்வரிடம் நேரம் கேட்டுள்ளேன் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் தொகுதி உட்கட்டமைப்பு குறித்து விவாதிக்க நேரம் கோரியுள்ளார்.


Coimbatore: கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழாவில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். விழா மேடையில் வானதி சீனிவாசனுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் கிளம்பிய முதலமைச்சர், வானதி சீனிவாசனை பார்த்தவுடன் அவருடன் சிறிது நேரம் மேடையில் பேசினார்.

இது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, "தமிழ்ப்புதல்வன் நிகழ்வில் பங்கேற்றதற்கு முதல்வர் தனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் எனவும், இந்த கல்லூரி தன்னுடைய தொகுதியில் வருகின்றது என அவரிடம் தெரிவித்ததாக கூறினார். மேலும் கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாகவும், கோவை தெற்கு தொகுதி உட்கட்டமைப்பு தொடர்பாகவும் நேரில் பேச நேரம் ஒதுக்க முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அவர் கண்டிப்பாக பேசலாம் என்று தெரிவித்தாகவும் கூறினார்.

மேலும், வரும் 18 ஆம் தேதி "கலைஞர்" நாணயம் வெளியிட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் தனக்கு அழைப்பு விடுத்தார் எனவும், அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர், நீங்களும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் தன்னிடம் சொன்னதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...