பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாடு நிலச்சரிவு பாதிப்பிற்கு மருத்துவக் குழு அனுப்பி வைப்பு

பொள்ளாச்சி நகர திமுக சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அனுப்பப்பட்டது. மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் மருத்துவர் மீரா தலைமையிலான குழு புறப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டது.



கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பொள்ளாச்சி நகர திமுக சார்பில் மருத்துவக் குழு அனுப்பப்பட்டது.



பொள்ளாச்சி நகராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் கலைவாணி கண்ணன் மகள் மருத்துவர் மீரா தலைமையிலான மருத்துவக் குழுவினர் இன்று வயநாடு பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருந்து, மாத்திரை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு செல்லும் மருத்துவ குழுவினரை பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.



மருத்துவக் குழுவினரின் வாகனத்தை பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...