உடுமலை அருகே பெரிய வாளவாடி குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு இடையூறு - விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார்

உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சியின் சப்டியார் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சப்டியார் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு குளம், குட்டைகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீராதாரங்களில் தேங்கியுள்ள வண்டல் மற்றும் களி மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, விவசாயிகள் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்து தாசில்தார் அளவில் அனுமதி பெற்று மண் எடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், சப்டியார் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு ஒரு அமைப்பைச் சேர்ந்த சில விவசாயிகள் இடையூறு விளைவித்து வருவதாகவும், பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதுடன், வண்டல் மண் அள்ளுவதற்காக கொண்டு வரப்பட்ட டிராக்டர், லாரிகள், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றுக்கு வாடகை கொடுத்து நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்த விவகாரம் தொடர்பாக ஒன்று திரண்ட விவசாயிகள் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜெ.சுகுமாறன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அப்போது விவசாயிகள், "பெரிய வாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சப்டியார் குட்டையில் வண்டல்மண் அள்ளும் பணியை ஒரு சிலர் சுய லாபத்திற்காக தடுத்து இடையூறு செய்து வருகின்றனர். அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லை என்றால் வாளவாடி பகுதியில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...