சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தான முகாம்

கோவை குனியமுத்தூரில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.


Coimbatore: 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

குனியமுத்தூர் கிளை தலைவர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த முகாம், சாய்கார்டன் அனெக்ஸ் பகுதியில் உள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.



குனியமுத்தூர் கிளை செயலாளர் நாசர், பொருளாளர் யூசுஃப், இப்ராஹிம், மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த இரத்த தான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.



மாவட்ட அரசு மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் தானமாக வழங்கப்பட்ட இரத்தங்களை சேகரித்தனர். இந்த முயற்சி மூலம், தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் கணிசமான அளவு இரத்தம் சேகரிக்கப்பட்டது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...