பொள்ளாச்சி மரப்பேட்டையில் வசிக்கும் குடும்பங்கள் வீட்டுப் பட்டா கோரி சார் ஆட்சியரிடம் மனு

பொள்ளாச்சி மரப்பேட்டையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா கோரி சார் ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர். தனிநபர் ஒருவர் வீடுகளை காலி செய்ய வற்புறுத்துவதாக குற்றம்சாட்டினர்.



கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மரப்பேட்டை வீதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்கு சொத்து வரி, தண்ணீர் வரி மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை தங்கள் பெயரிலேயே செலுத்தி வருகின்றனர்.



நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இந்த குடும்பங்கள், தற்போது ஒரு தனிநபர் தனது சொந்த இடம் என கூறி வீடுகளை காலி செய்ய வற்புறுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனுவில், காலங்காலமாக அப்பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்கி, தனிநபரின் தொல்லையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...