வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

கோவையில் வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் செயல்பாடுகளை எமர்ஜென்சி காலத்துடன் ஒப்பிட்டுள்ளார்.



கோவை: கோவை டவுன் ஹாலில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் கலவரங்களை கண்டித்து போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை அவர் விமர்சித்தார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடப்பதாகவும், அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி தவிப்பதாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டின் எல்லையில் காத்திருப்பதாகவும், பெண்களும் குழந்தைகளும் பலவந்தமாக தாக்கப்படுவது உலகளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மதத்தின் பெயரால் வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு இதில் தலையிட்டு வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்காக இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாகவும் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

"தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அழக்கூட உரிமை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கின்ற தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்," என்று அவர் கூறினார். நீதிமன்றத்தை நாடி ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை இந்து முன்னணி பெற்றுக்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

சுதந்திர தின ஊர்வலங்களுக்கு கூட தமிழகத்தில் தடை விதிப்பது நியாயமற்றது என்றும், ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை தடை செய்வது ஏற்புடையதல்ல என்றும் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். மேலும், திமுக அரசு எமர்ஜென்சி காலத்தைப் போல நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

"திமுக அரசாங்கத்திற்கும் மற்றும் காவல்துறையினருக்கும் கடவுள் தான் புத்தி கொடுக்க வேண்டும்," என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது உரையை முடித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...