கோவையில் நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டியில் அயோத்திய அணி சாம்பியன்

கோவையில் ஏஜேகே டர்ஃப் டென்5 சார்பில் நடைபெற்ற ஆடவர்களுக்கான திறந்த நிலைப்பிரிவு ஐவர் கால்பந்து போட்டியில் அயோத்திய புட்பால் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


கோவை: கோவை பாலக்காடு நெடுஞ்சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே டர்ஃப் டென்5 நவீன கால்பந்து விளையாட்டு மைதானத்தில் ஏஜேகே டர்ஃப் டென்5 சார்பில் ஆடவர்களுக்கான திறந்த நிலைப்பிரிவு ஐவர் கால்பந்து போட்டி 11.8.2024 அன்று நடைப்பெற்றது. நாடு முழுவதிலுமிருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.



நாக் அவுட் முறையில் பகல் இரவு போட்டிகளாக நடந்த இந்த நிகழ்வில், கால்பந்து வீரர்கள் சாதுர்யமாக பந்தை கடந்து இலக்கை நெருங்கினர். மிகவும் சுவாரஸ்யமாக நடந்த இப்போட்டியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

இந்தப்போட்டிகளில் முதல் இடத்தை அயோத்திய புட்பால் அணி 5 புள்ளிகளுடன் வென்றது. ஒரு புள்ளியுடன் ஃபிரண்ட்ஸ் புட்பால் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. மூன்றாவது இடத்தை 3 புள்ளிகளுடன் ஏஜேகே ஸ்ட்ரைக்கர்ஸ் புட்பால் அணி வென்றது. நேரு கலை அறிவியல் கல்லூரி அணி 2 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்றது.

முதலிடம் வென்ற அயோத்தியா புட்பால் அணிக்கு பரிசுக்கோப்பையும், ரூபாய் 10,000 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் வென்ற ஃபிரண்ட்ஸ் புட்பால் அணிக்கு ரூபாய் 7,000 பரிசுத்தொகையும், பரிசுக்கோப்பையும், மூன்றாம் இடம் வென்ற ஏஜேகே ஸ்ட்ரைக்கர்ஸ் புட்பால் அணிக்கு ரூபாய் 5,000 பரிசுத்தொகையும், பரிசுக்கோப்பையும், நான்காம் இடம் வென்ற நேரு கலை அறிவியல் கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டது.

ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளை ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் தினேஷ்குமார் அவர்கள் வழங்கி, வெற்றி பெற்ற அணிகளை பாராட்டி வாழ்த்தினார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...