கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் போஸ்டர்கள்: மீண்டும் மோதல் சூழல்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



Coimbatore: கோவை மாநகராட்சி பகுதியில் அரசியல் கட்சிகள் மாறி மாறி பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டியதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டு சிறைக்குச் செல்லும் அளவிற்கு நிலைமை உருவானது.

இதனைத் தடுக்கும் விதமாக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேம்பாலச் சுவர்களில் கோவை மாநகரைச் சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள், இயற்கை ஓவியங்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு வரையச் செய்தது. மேலும், விடுதலைப் போராட்ட தியாகிகளின் உருவப்படங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் அரசியல் கட்சியினர் இடையே சமரசமான சூழ்நிலை உருவானது.



ஆனால், தற்போது மாநகராட்சி அலுவலகம் முன்பு மீண்டும் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மோதல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...