ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் சுதந்திர தின சிறப்பு: 78 இந்திய ஆளுமைகளுக்கு 'வாழும் மெழுகு அருங்காட்சியகம்'

கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் 78 புகழ்பெற்ற இந்திய ஆளுமைகளுக்கு 'வாழும் மெழுகு அருங்காட்சியகம்' அமைத்து புகழாஞ்சலி செலுத்தினர். இந்த தனித்துவமான நிகழ்வு பார்வையாளர்களை கவர்ந்தது.


கோவை: கோவையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் சார்பில் 78 செல்வாக்கு மிக்க இந்திய ஆளுமைகளுக்கு 'வாழும் மெழுகு அருங்காட்சியகம்' அமைக்கப்பட்டு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்த தனித்துவமான அருங்காட்சியகத்தில், மெழுகுச் சிலைகளுக்கு பதிலாக மாணவர்களே நம் பாரத தேசத்தின் புகழ்பெற்ற நாயகர்கள் போன்று வேடமணிந்து இருந்தனர். மொத்தம் 40 நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு நிலையத்திலும் இரண்டு மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

அரசியல், விளையாட்டு, பாரம்பரிய நடனக் கலை, மற்றும் கல்வி என அனைத்து துறைகளையும் சேர்ந்த வாழ்ந்து மறைந்த மற்றும் நம் காலத்தில் வாழ்கின்ற ஆளுமைகள் இதில் இடம்பெற்றிருந்தனர். அம்பேத்கர், நேரு, சுபாஷ் சந்திர போஸ், இந்திரா காந்தி போன்ற தேசத் தலைவர்கள், எம்.எஸ். சுப்புலட்சுமி, இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போன்ற இசைத்துறை கலைஞர்கள், ஜி.டி. நாயுடு, சி.வி. ராமன், ஹோமி பாபா, எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகள் மற்றும் வேலு நாச்சியார், ராணி மங்கம்மாள் ஆகிய பெண் சாதனையாளர்கள் உள்ளிட்ட 78 புகழ்பெற்ற இந்திய ஆளுமைகளின் வேடத்தை மாணவர்கள் ஏற்றிருந்தனர்.



பார்வையாளர்களின் வசதிக்காக, ஒவ்வொரு நிலையத்திற்கும் முன் ஒரு பொத்தான் அமைக்கப்பட்டிருந்தது. அதை அழுத்தும்போது, அந்த நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் செல்வாக்கு மிக்க இந்தியர்கள் குறித்த குறிப்புகளை மாணவர்கள் வழங்கினர். இந்த அருங்காட்சியகத்திற்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 'கரடி டேல்ஸ் பதிப்பகத்தின்' உரிமையாளரும், எழுத்தாளருமான ஷோபா விஸ்வநாத், "இந்த வாழும் அருங்காட்சியகம் படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மதிநுட்பமான வெளிப்பாடாக இருந்தது. இந்தப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஈர்க்கக்கூடிய முயற்சியால் வரலாறு உயிர்ப்பிக்கப்பட்டிருந்தது," என்று பாராட்டினார்.

மேலும் அவர், "நம் பாரதத்தின் அடையாளங்களாக இருக்கும் நாயகர்கள் போன்று விரிவான விவரங்களுடன் வேடமணிந்திருந்தது அவர்களின் அர்ப்பணிப்பை கண்கூடாகக் காட்டியது. உரையாடும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்ததால், இந்த அனுபவம் கற்றுக்கொள்ளவும், ஈடுபாட்டை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்தது. என்னைப் பொறுத்தவரை ஆழ்ந்த கற்றல் ஆற்றலுக்கு ஒரு உண்மையான சான்றாக இது இருந்தது," என்று குறிப்பிட்டார்.

இந்த தனித்துவமான முயற்சி, மாணவர்களின் படைப்பாற்றலையும், வரலாற்று அறிவையும் வெளிப்படுத்தியதோடு, சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு மேலும் அர்த்தம் சேர்த்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...