உடுமலை மாணவி இரண்டாவது முறையாக தேசிய துப்பாக்கி சூடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை

திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவி பிரீத்தி, தேசிய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் 296 மாணவர்கள் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவி பிரீத்தி, தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரீத்தி கடந்த ஆண்டு மார்ச் 2023-ல் துப்பாக்கி சுடும் பயிற்சியைத் தொடங்கினார். முதலில் மாநில அளவிலான தேசிய மாணவர் படைக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார். பின்னர் 5TN Girls Battalion NCC அலுவலகத்தின் மூலம் தொடர் பயிற்சி மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் மௌலங்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த மாதம் திருச்சி NIT கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் தேசிய அளவில் 296 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இச்சாதனைக்காக உடற்கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு தேசிய மாணவர் படை தலைவர் ஆகியோர் பிரீத்தியை சென்னைக்கு அழைத்து பாராட்டினர். இதைத் தொடர்ந்து, மாணவியை கௌரவிக்கும் விதமாக கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.



இவ்விழாவில் 5TN Girls Battalion Commanding Officer J.M ஜோஷி கலந்துகொண்டு மாணவி பிரீத்தியையும், தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் முனைவர் கற்பகவள்ளியையும் பாராட்டினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் முனைவர் மஞ்சுளா, கல்லூரி முதல்வர் முனைவர் பரமேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் வரலாற்று துறை இணை பேராசிரியரும் தேசிய மாணவர் படை அலுவலருமான கேப்டன் முனைவர் கற்பகவள்ளி மேற்கொண்டார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...