பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் அவசரமாக வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பூஜை நடந்துகொண்டிருந்தபோது, பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தற்காலிகமாக கோயிலில் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பொள்ளாச்சிக்கு அருகில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். இக்கோயில் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இப்பகுதி மக்கள் அதிகளவில் வழிபட வருவது வழக்கம். இன்று காலை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயருக்கு பூஜைகள் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் பலரும் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.



நேற்று இரவு ஆழியார் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலின் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கோயிலுக்குள் தரிசனம் செய்துகொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தற்போது பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோயிலில் சாமி தரிசனம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...