பொள்ளாச்சியில் 78வது சுதந்திர தின விழா: நகராட்சி தலைவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்

பொள்ளாச்சி நகராட்சியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Coimbatore: பொள்ளாச்சி நகராட்சியில் 78வது சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகள் கொடி வணக்கம் பாடி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். பின்னர், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.



மேலும், பொள்ளாச்சி நகராட்சியில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டத்திலேயே முதல் முறையாக பொள்ளாச்சி நகராட்சியில் அதிகாரிகளுக்கு இடையே விரைந்து தொடர்பு கொள்ளும் வகையில் வாக்கி டாக்கி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் கணேசன், துணைத் தலைவர் கௌதமன் ஆகியோர் வாக்கி டாக்கிகளை வழங்கி புதிய தொடர்பு முறையை தொடங்கி வைத்தனர். இந்த சுதந்திர தின விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...