கோவை அரசு உதவி பெறும் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கிய நெகிழ்ச்சி காட்சி

கோவை பேரூரில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கிய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



கோவை: கோவை பேரூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.



இந்தப் பள்ளியில் பணக்காரர், ஏழை என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரே வகுப்பில் படித்து வந்தனர். ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

பள்ளிப் படிப்பை முடித்து பிரிந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த முன்னாள் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் கட்டியணைத்து தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளைக் கற்றுத் தந்த ஆசிரியர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தனர்.



ஆசிரியர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து கௌரவித்த முன்னாள் மாணவர்கள், அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். இந்த உணர்வுபூர்வமான காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. ஆசிரியர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.



நிகழ்ச்சியின் இறுதியில், முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளைப் பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சி பழைய நினைவுகளை மீட்டெடுத்து, ஆசிரியர்-மாணவர் உறவின் மகத்துவத்தை வெளிப்படுத்தியது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...