வால்பாறையில் மின் பராமரிப்பு பணி: 19-ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

வால்பாறை பகுதியில் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், வருகிற 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வருகிற 19-ம் தேதி திங்கள்கிழமை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஆயர்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஊமையாண்டி முடக்கு பகுதியில் புதிய மின் கோபுரம் அமைக்கும் பணியும், மாதாந்திர பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக, ஆயர்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வால்பாறை வட்டப் பகுதிகளான அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், உறங்குடி, தாய்முடி, சேக்கல் முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ஹை ஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உரு, வால்பாறை, சிங்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும்.

மேலும், மின் பராமரிப்பு பணிகளின் போது மின்பாதைகளுக்கு அருகே உள்ள மரங்களின் கிளைகளை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்களை தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...