வால்பாறையில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாட்டம்

வால்பாறையில் நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையங்கள் மற்றும் பள்ளிகளில் தேசியக் கொடியேற்றி 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதிகாரிகள், பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் 78வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் தேசியக் கொடியேற்றி விழா சிறப்பிக்கப்பட்டது.

வால்பாறை நகராட்சி சார்பில் நகராட்சித் தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் ஆணையாளர் விநாயகம் தலைமையில் பேரிடர் மீட்புப் படையினர் முன்னிலையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், வால்பாறை காவல் நிலையம், முடீஸ் காவல் நிலையம், சோலையார் அணை காவல் நிலையம் ஆகிய இடங்களிலும் கொடியேற்று விழா நடைபெற்றது.



வால்பாறையில் உள்ள காந்தி சிலை வளாகத்தில், காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அங்குள்ள கொடிக்கம்பத்தில் தூய்மைப் பணியாளர்கள் கொடியேற்றி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்.



பள்ளிகளிலும் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் தேசிய கீதம் பாடி, தேசபக்தி பாடல்கள் இசைத்து விழாவை மேலும் சிறப்பித்தனர். இவ்வாறு வால்பாறை முழுவதும் 78வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...