மலைப்பாதையில் பழுதடைந்த உதகை ரயில்- சுற்றுலாப் பயணிகள் அவதி

உதகை மலை ரயில் மலைப்பாதையின் நடுக்காட்டில் பழுதாகி நின்றதால் சுமார் 8 மணி நேரம் உணவு மற்றும் தண்ணீரின்றி சுற்றுலாப்பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதியின் வழியாக மலை ரயில் செல்லும் ரம்மியமான அனுபவங்களைப் பெற தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர்.

மேலும், தற்போது கோடை விடுமுறையினை முன்னிட்ட நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விரும்புவதும் நீலகிரி மலை ரயில் பயணமே.

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் 282 பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டது. ரயில், ஆர்டலி அருகே சென்றுகொண்டிருந்த போது எஞ்சின் உந்து சக்தி குறைவால் ரயில் மலைப்பாதையில் நடுவழியில் பழுதாகி நின்றது. 

இதனைத்தொடர்ந்து, குன்னூரில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.

முன்னதாக, சுமார் 8 மணி நேரம் நடுக்காட்டில் ரயில் பழுதாகி நின்றதால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...