மடத்துக்குளம் அருகே வழித்தட பிரச்னை: திமுகவினர் வாக்குவாதம்; விவசாயி தற்கொலை முயற்சி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வழித்தட பிரச்னையால் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் வாக்குவாதம். விவசாயி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில் வீரக்குமார் என்பவருக்கு 3.30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் திமுகவைச் சேர்ந்த கௌதம் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

கௌதம் தனது நிலத்திற்கு செல்ல வீரக்குமாரின் இடத்தில் வழித்தடம் உள்ளதாக கூறி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். விசாரணைக்குப் பின், வருவாய் கோட்டாட்சியர் கௌதமுக்கு வழித்தடம் ஏற்படுத்தி தர மடத்துக்குளம் வட்டாட்சியர் மற்றும் சர்வே துறைக்கு உத்தரவிட்டார்.

வீரக்குமார் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று கௌதமிற்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட திமுகவினர் மடத்துக்குளம் வட்டாட்சியர் மற்றும் சர்வே துறையினருடன் வீரக்குமார் இடத்துக்கு வந்தனர். வீரகுமார் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரது உறவினர்கள் ஐந்து நாள் அவகாசம் கேட்டனர். இதற்கு கௌதம் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.





சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி வீரகுமார் தரப்பில் உள்ள பெண்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வீரக்குமார் உறவினர் கனகராஜ் என்பவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செல்வராணி என்பவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயன்றதால் பரபரப்பு அதிகரித்தது.



சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தற்சமயம் வீரக்குமார் தரப்பில் வழியாக செல்லும் வழித்தடம் எடுப்பதற்கு ஐந்து நாள் அவகாசம் வழங்கியுள்ளதாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...