உடுமலையில் திருமாவளவனின் 62வது பிறந்தநாள்: வி.சி.க வினர் மாணவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்

உடுமலையில் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் வி.சி.க வினர் மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



வி.சி.க துப்புறவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மாநில துணை செயலாளர் கு.விடுதலை மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் சித்ரா க.ராதா, ஆர்.தேன்மொழி, கே.ஜெயந்தி, அறிவொளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மாணவர்களுக்கு உணவுகளை வழங்கினர்.



இந்த நிகழ்வின் போது, பெதம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் இணைந்தார். அவருக்கு விடுதலை மணி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இந்த நிகழ்வில் பெதப்பம்பட்டி கார்த்திகேயன், கு.சக்திவேல், தேவிகா, சுமதி, ஜனிதா, ஹேமலதா, என்.ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...