விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்: தமிழக அரசு மீது விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

கோவை காரமடை, பொள்ளாச்சியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுப்பு, காவல்துறை தாக்குதல் குறித்து விவசாயிகள் சங்கம் கண்டனம். அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.



Coimbatore: கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் எஸ்கேபி(என்பி) சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்து, காவல்துறை ஆய்வாளர்கள் விவசாயிகளை துன்புறுத்தியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சங்கத்தின் தமிழக இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.



பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தின் பல இடங்களில் டிராக்டர் பேரணி அமைதியாக நடைபெற்று வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் காவல்துறை ஆய்வாளர்கள் ராஜசேகர், வெங்கடேஷ் ஆகியோர் டிராக்டரில் வந்த விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி, வாகனங்களை பறிமுதல் செய்தனர். பெண் விவசாயிகளை இரவு 7.30 மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது," என்று குற்றம்சாட்டினார்.

மேலும், "ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிமன்றம் வாகன பேரணி நடத்த அனுமதி அளித்திருந்தும், இரு காவல் ஆய்வாளர்கள் சட்ட விரோதமாகவும், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளனர். தமிழக விவசாயிகள் மீது காவல்துறையை ஏவி திமுக அரசு பழிவாங்குகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது," என்றார்.

"தவறு செய்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஆகஸ்ட் 27-ம் தேதி திருச்சியில் நடைபெறும் சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை பொறுத்து அடுத்த கட்ட போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்," என பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...