கோவை: நில மோசடி குறித்து அதிமுக எம்.எல்.ஏ மீது குடும்ப வாரிசுதாரர்கள் புகார்

கோவையில், சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ மீது 30க்கும் மேற்பட்ட குடும்ப வாரிசுதாரர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நில மோசடி புகார் அளித்துள்ளனர்.



Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்து தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, கோவை மாவட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், அவரது உறவினர் மற்றும் ஒரு தனியார் நபர் ஆகியோர் இணைந்து இந்த மோசடியை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

புகார் மனுவில், நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும், குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.



வாரிசுதாரர்களின் கூற்றுப்படி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காளிக்கோனாரின் வாரிசுதாரர்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலத்தை, உயிருடன் இல்லாதவர்களை உயிருடன் இருப்பதாக காண்பித்து மோசடி செய்து அபகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது, "ஸ்ரீ சக்தி கார்டன்" என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வீட்டு மனைகளை விற்பனை செய்து வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். மோசடியாக வீட்டுமனைகளை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், அவருடைய உறவினர் மணிகண்டன் மற்றும் ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியோர் இணைந்து தங்களுடைய சொத்துக்களை திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

வாரிசுதாரர்கள், தங்களை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், மேற்கூறிய மூவரும்தான் பொறுப்பு என்றும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...