கோவை மாநகராட்சியில் மேயர் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (20.08.2024) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக மேயரிடம் சமர்ப்பிக்கலாம்.


Coimbatore: கோவை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, நாளை (20.08.2024) செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமை வகிப்பார். கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாக மேயரிடம் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மக்கள் முன்வைக்கலாம்.

இந்தக் கோரிக்கைகளின் மீது மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...