வால்பாறை ஐயர்பாடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை ஐயர்பாடி பகுதியில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரலானது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமீப காலமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தைகள் அதிகளவில் நுழைந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஐயர்பாடி பகுதியில் சாலை ஓரத்தில் சிறுத்தை நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், சிறுத்தையைக் கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும், தாங்களாகவே சிறுத்தையை விரட்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...