தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்கள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது. விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன. ஒன்றிய அரசின் களை ஆராய்ச்சி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த களை மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.



இந்த ஆண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் களை மேலாண்மை பிரிவு விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தியது. முகாம்களின் தொடக்க நிகழ்வாக, பல்கலைக்கழகத்தின் கிழக்கு மற்றும் மத்தியப் பண்ணைகளில் பணிபுரியும் அனைத்து பண்ணைத் தொழிலாளர்களுக்கும் பார்த்தீனியம் களை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் உழவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப. பரசுராமன் முன்னிலை வகித்து பார்த்தீனியம் மேலாண்மை குறித்து சிறப்புரையாற்றினார். விழிப்புணர்வு முகாம்களில் பார்த்தீனியம் களைச் செடி, அதன் நச்சுத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் உழவியல், இரசாயன மற்றும் உயிரியல் முறைகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.



மேலும், பார்த்தீனியச் செடிகளை பூக்கும் முன் பிடுங்கி உரமாக்குதல் பற்றிய செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 16 முதல் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் பேராசிரியர் மற்றும் களை மேலாண்மை பிரிவின் முதன்மை விஞ்ஞானி முனைவர் செ. ராதாமணி, இணைப்பேராசிரியர் முனைவர் ச.பாரதி ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தினர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...