தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்கள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது. விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பார்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன. ஒன்றிய அரசின் களை ஆராய்ச்சி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த களை மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.



இந்த ஆண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் களை மேலாண்மை பிரிவு விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தியது. முகாம்களின் தொடக்க நிகழ்வாக, பல்கலைக்கழகத்தின் கிழக்கு மற்றும் மத்தியப் பண்ணைகளில் பணிபுரியும் அனைத்து பண்ணைத் தொழிலாளர்களுக்கும் பார்த்தீனியம் களை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் உழவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப. பரசுராமன் முன்னிலை வகித்து பார்த்தீனியம் மேலாண்மை குறித்து சிறப்புரையாற்றினார். விழிப்புணர்வு முகாம்களில் பார்த்தீனியம் களைச் செடி, அதன் நச்சுத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் உழவியல், இரசாயன மற்றும் உயிரியல் முறைகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.



மேலும், பார்த்தீனியச் செடிகளை பூக்கும் முன் பிடுங்கி உரமாக்குதல் பற்றிய செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 16 முதல் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் பேராசிரியர் மற்றும் களை மேலாண்மை பிரிவின் முதன்மை விஞ்ஞானி முனைவர் செ. ராதாமணி, இணைப்பேராசிரியர் முனைவர் ச.பாரதி ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தினர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...