கிணத்துக்கடவில் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி

கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவில் பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி நியாயவிலைக் கடையை ஆய்வு செய்தார். திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனும் உடனிருந்தார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரமும் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் மாஸ்திகவுண்டன்பதி நியாயவிலைக்கடையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி அவர்களுடன் இணைந்து கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் இன்று ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உடனிருந்தனர்.



இந்தியா கூட்டணி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈஸ்வரசாமி எம்.பி, இன்று கோவை தெற்கு மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியப் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.





இந்த நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் போது, நியாயவிலைக் கடையின் செயல்பாடுகள், பொருட்களின் தரம் மற்றும் விநியோகம் குறித்து எம்.பி ஈஸ்வரசாமி கேள்விகள் எழுப்பினார். மேலும், பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...