கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சீட்டு வழங்கல் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழா

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சீட்டு வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. அப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.


கோவை: கோவை புறநகர் வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம், NO 24 வீரபாண்டி ஊராட்சி ஆனைகட்டி பகுதி மற்றும் பன்னிர்மடை பகுதியில் ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண் குமார் கலந்து கொண்டு, கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார். இந்த நிகழ்வு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணையின் பேரிலும், முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணியின் ஆலோசனையின் பேரிலும் நடைபெற்றது.



அதேநாளில், துடியலூரை அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.



இந்த விழாவிலும் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் கலந்து கொண்டார். அவருடன் ஊர் பொதுமக்களும், அதிமுக கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...