பாலக்காடு கோழிப்பாறை அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

பாலக்காடு கோழிப்பாறையில் உள்ள அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பல்வேறு நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.



Coimbatore: பாலக்காடு அருகே உள்ள கோழிப்பாறையில் அமைந்துள்ள அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுவதாக மருத்துவமனையின் முதன்மை மருத்துவ இயக்குனர் சுரேஷ் பாபு தெரிவித்தார்.

இந்த முகாமில் பொது அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, நீரிழிவு பாத நோய் சிகிச்சை, எலும்பு நோய் சிகிச்சை ஆகியவற்றுக்கு இலவச ஆலோசனையும், மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மேலும், பவுத்திரம், மூலம், குடலிறக்கம், விரை வீக்கம், முதுகு வலி, மூட்டு வலி, முதுகு தண்டுவட பிரச்சினைகள் போன்ற நோய்களுக்கும் ஆலோசனையும், சிகிச்சையும் வழங்கப்படுகிறது.



அஹல்யா நீரிழிவு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ இயக்குனர் சுரேஷ் பாபு மற்றும் பொது அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு, நீரிழிவு பாத நோய் சிகிச்சை பிரிவு, எலும்பு நோய் சிகிச்சை பிரிவு ஆகியவற்றின் முதன்மை மருத்துவர்கள் பொள்ளாச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்த தகவல்களை வெளியிட்டனர்.

அறுவை சிகிச்சைகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுவதாகவும் சுரேஷ் பாபு கூறினார். பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...