கோவையில் ஜீவாவின் 118வது பிறந்தநாள்: மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் சிலைக்கு மரியாதை

கோவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அமரர் ஜீவாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஜீவா இல்லத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவையில் மறைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அமரர் ஜீவாவின் 118வது பிறந்தநாள் இன்று (21.08.2024) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவை வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், ஜீவா இல்லத்தில் உள்ள ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அமரர் ஜீவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த இலக்கியவாதி, மேடை பேச்சாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். மகாத்மா காந்தி அடிகளால் "நாட்டின் சொத்து" என்று பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் என். பெரியசாமி, மாவட்ட செயலாளர் சி. சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ஜே. ஜேம்ஸ், எம். குணசேகர், மாவட்ட பொருளாளர் சி. தங்கவேல், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி. மௌனசாமி, ஆர். துரைசாமி, சாந்திசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இஸ்கப் மாநிலப் பொருளாளர் எஸ். கோட்டியப்பன், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் என். செல்வராஜ், பி. சுப்ரமணியன், கே. புருசோத்தமன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட செயலாளர் ஏ. அஸ்ரப்அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கிழக்கு மண்டல செயலாளர் எஸ். சண்முகம், சூலூர் வடக்கு செயலாளர் பி.எஸ். ராமசாமி, மேற்கு மண்டல செயலாளர் என். சந்திரன், மத்திய மண்டல துணைச் செயலாளர் ஏ.பி. மணிபாரதி, மதுக்கரை தங்கராஜ், சூலூர் கண்ணன், அன்னூர் செல்வராஜ், ஆனைமலை எஸ். காளீஸ்வரன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...