கிணத்துக்கடவு: குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு - வார்டு கவுன்சிலர் எதிர்ப்பு

கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில், குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு வழங்க முயற்சி. வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி சொலவம்பாளையம் ஊராட்சியில் முறைகேடான முறையில் தண்ணீர் இணைப்பு வழங்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சொலவம்பாளையம் ஊராட்சியின் முதல் வார்டுக்கு உட்பட்ட பகுதியில், எந்த முன்னறிவிப்பும் இன்றி ஊராட்சி சார்பில் தண்ணீர் பைப் போடுவதற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள அன்பு நகரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வேண்டி பல முறை அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதேபோல், வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் அவர்களும் ஊராட்சி தலைவரிடம் பல முறை இது குறித்து வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அந்தப் பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்காமல், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஆதரவாக குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு கொடுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக கவுன்சிலர் சதீஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்கே முதலில் தண்ணீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...