உடுமலை அருகே கொங்கல் நகரம் ஊராட்சியில் வார சந்தை ஏல வாக்குவாதம்: ஏலம் ஒத்திவைப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரம் ஊராட்சியில் வார சந்தை ஏலத்தின் போது வாக்குவாதம் ஏற்பட்டதால், ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல் நகரம் ஊராட்சியில் வார சந்தை ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏலத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



கொங்கல் நகரம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் 2024 ஆகஸ்ட் 22 முதல் 2025 ஆகஸ்ட் 21 வரை காய்கறி சந்தை நடத்த சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் இன்று காய்கறி சந்தை ஏலம் நடைபெறும் என ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டோ விளம்பரம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் பத்தாயிரம் ரூபாய் தொகையை ஊராட்சியின் பெயரில் டிடியாக எடுத்து ஊராட்சி அலுவலகத்தில் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொங்கல் நகரம் ஊராட்சியைச் சேர்ந்த ராமலிங்கம், செந்தில் குமார், சுரேஷ், தனபால் ஆகிய நான்கு பேர் ஊராட்சி செயலாளர் மகாலிங்கத்திடம் டிடியை வழங்கினர். ஆனால், ஏலம் துவங்குவதற்கு முன் ஏலம் எடுக்க வந்த நான்கு பேருக்கு ஆதரவாக உடன் வந்தவர்கள் கூச்சல் குழப்பம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கொங்கல் நகரம் ஊராட்சி அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் இன்று நடைபெற இருந்த வாரச்சந்தை ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தார். கொங்கல் நகரம் ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் எடுக்க வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...