தாராபுரம்: தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிவாரண உதவி

தாராபுரம் புது கோட்டை மேடு பகுதியில் தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினருக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே புது கோட்டை மேடு பகுதியில் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜெயா (வயது 62) என்பவரின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கடந்த நான்கு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வீட்டின் மண் சுவர் நனைந்து பலவீனமடைந்ததே இதற்குக் காரணம் என தெரிகிறது. சம்பவம் நடந்த நேரத்தில் ஜெயாவின் மகன் சுரேஷ் வீட்டின் வெளியே இருந்ததால், அவர் உயிர்தப்பினார். ஜெயா சமையலறையில் இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.



இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கினார். இந்நிகழ்வில் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், நகர்மன்றத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் நிர்வாகம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மழைக்காலத்தில் பாதுகாப்பற்ற கட்டிடங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...