கோவை பள்ளி மாணவர்கள் சந்திராயன் 3 தரையிறக்கத்தை தத்ரூபமாக சித்தரித்து அசத்தல்

கோவையில் நடைபெற்ற அவின்யா கண்காட்சியில், சுகுணா ரிப் வி பள்ளி மாணவர்கள் சந்திராயன் 3 நிலவு தரையிறக்கத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். 165 தலைப்புகளில் செயல்முறை விளக்கங்களுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.



Coimbatore: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுகுணா ரிப் வி பள்ளியில் நடைபெற்ற அவின்யா கண்காட்சியில், மாணவர்கள் சந்திராயன் 3 விண்கலத்தின் நிலவு தரையிறக்கத்தை தத்ரூபமாக சித்தரித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

கடந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவத்தில் சந்திராயன்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், மாணவர்கள் சந்திராயன் 3 விண்கலம் மெதுவாக நிலவில் இறங்குவதையும், அதனைத் தொடர்ந்து ரோவர் வாகனம் வெளியே வருவதையும் மிகத் துல்லியமாக வடிவமைத்திருந்தனர்.



கண்காட்சியில் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட ஏவுகணை, லேண்டர், ரோவர், சூரிய ஒளியில் இயங்கும் கார் ஆகியவை இடம்பெற்றன. மேலும், மோட்டார் பம்பு வடிவமைப்பு, கிராமசபை, நீதிமன்ற நிகழ்வுகள், பண்டைய கால தமிழர்களின் கலை கலாச்சாரம், ஆங்கிலத்தின் சிறப்பு, நாடகம், மருத்துவத்துறை, தாவரவியல், வேதியியல், விளையாட்டு, யோகா மற்றும் கணித புதிர்கள் உள்ளிட்ட 165 விதமான தலைப்புகளில் செயல்முறை விளக்கங்களுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.



இந்த கண்காட்சியைக் கண்டு வியந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியதை நேரில் கண்ட அனுபவம் போல இருந்ததாகத் தெரிவித்தனர். இந்த முயற்சி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதோடு, நாட்டின் விண்வெளி சாதனைகளை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...