கோவை மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் திடீர் மரணம்

கோவை மதுக்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 29 வயது பயிற்சி மருத்துவர் சந்தோஷ் திடீரென உயிரிழந்தார். வயிற்று உபாதைக்கு மருந்து எடுத்துக்கொண்ட பின்னர் ஓய்வு அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.



Coimbatore: கோவை மதுக்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் அட்டப்பாடியைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகன் சந்தோஷ் (29), கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் கோவை திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, தினமும் மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல சந்தோஷ் மதுக்கரை அரசு மருத்துவமனைக்குப் பணிக்காக வந்தார். மதியம் தனக்கு வயிற்று உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்த செவிலியர்களிடம் தெரிவித்தார். இதற்காக மருந்து செலுத்திக் கொள்வதாகக் கூறி, மருந்து எடுத்துக்கொண்டு பயிற்சி மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.

நீண்ட நேரம் ஆகியும் சந்தோஷ் வெளியே வராததால், அங்கிருந்த மற்ற பயிற்சி மருத்துவர்கள் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக மதுக்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த காவல்துறையினர் சந்தோஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திடீர் மரணம் மருத்துவத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரது இழப்பால் பெரும் துயரத்தில் உள்ளனர். மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய காவல்துறையின் விசாரணை முடிவுகளுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...