விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை ஆனைக்கட்டி அருகே உள்ள 5 பழங்குடி கிராமங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வேண்டி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்கள் கிராமங்களிலேயே சிலை வைக்க அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.



Coimbatore: கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள பழங்குடி கிராமங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டுமென பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் இந்து அமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் ஊர் மக்கள் என பலரும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து, நீர் நிலைகளில் கரைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

கோவை ஆனைக்கட்டி அருகே உள்ள தூமனூர், கண்டிவழி, ஜம்புகண்டி, கொண்டனூர் உள்ளிட்ட 5 பழங்குடி கிராமங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பழங்குடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, ஒவ்வொரு முறையும் அருகே உள்ள கிராமங்களில் சென்று வழிபாடு செய்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதாகவும், இந்த முறை தங்களது கிராமங்களிலேயே சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற கூறியதால் மனு அளித்துள்ளதாகவும் அவர்கள் விளக்கமளித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...