விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை ஆனைக்கட்டி அருகே உள்ள 5 பழங்குடி கிராமங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வேண்டி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்கள் கிராமங்களிலேயே சிலை வைக்க அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.



Coimbatore: கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள பழங்குடி கிராமங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டுமென பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் இந்து அமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் ஊர் மக்கள் என பலரும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து, நீர் நிலைகளில் கரைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

கோவை ஆனைக்கட்டி அருகே உள்ள தூமனூர், கண்டிவழி, ஜம்புகண்டி, கொண்டனூர் உள்ளிட்ட 5 பழங்குடி கிராமங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பழங்குடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, ஒவ்வொரு முறையும் அருகே உள்ள கிராமங்களில் சென்று வழிபாடு செய்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதாகவும், இந்த முறை தங்களது கிராமங்களிலேயே சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற கூறியதால் மனு அளித்துள்ளதாகவும் அவர்கள் விளக்கமளித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...