பசுமை புரட்சியினை மேற்கொள்ளும் வைல்டு விங் டிரஸ்ட்

சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பான வைல்டு விங் டிரஸ்ட், வன விலங்குகளை பாதுகாத்தல், சுற்றுப்புறத் சூலளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. மேலும், மலைவாழ் மக்களின் கல்விக்காகவும், இயற்கை குறித்தான விழிப்புணர்வையும் இந்த அமைப்பு பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது.

தற்போது, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து பசுமை புரட்சியினை மேற்கொள்ள வைல்டு விங் டிரஸ்ட் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து வைல்டு விங் டிரஸ்ட் சரவணன் சிம்ப்ளிசிட்டி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வைல்டு விங் டிரஸ்ட் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சுமார் 8000 ஆயிரம் செடிகளை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் வளர்த்து வருகிறோம். இதில் 23 வகைச் செடிகள் நம் நாட்டுச் செடிகள் ஆகும். இவை மூன்று மாதத்தில் சுமார் 6 அடி வரை வளர்ந்து விடும். 

பின் இதனை வரும் மழைக்காலத்தில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கல்லூரி வளாகத்தில் உள்ள 8 ஆயிரம் செடிகளுக்கும் குமரகுரு கல்லூரி நிர்வாகமே இடத்தினை ஒதுக்கி தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். 

எங்களது இந்த முயற்சிக்கு கல்லூரி நிர்வாகத்தினரும், வைல்டு விங் டிரஸ்ட் உறுப்பினர்களும் சிறந்த முறையில் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்" என்றார்.

வைல்டு விங் டிரஸ்ட்-யின் இந்த பசுமை புரட்சி முயற்சி வெற்றி பெறவும், இந்த பூவுலகம் பசுமையடைந்து வனமும் வளமும் பெறுக நமது சிம்ப்ளிசிட்டியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...